Vallalar Universal Mission Trust   ramnad......
அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின் அருளர செனஅறிந் தனன்
அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின்
அருளர செனஅறிந் தனன்பின்
உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை
உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய்
வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி
வழிகின்ற தென்வசங் கடந்தே
இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை
ஈந்தருள் இற்றைஇப் போதே.
தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
தனிநெறி உலகெலாம் தழைப்பக்
கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
புண்ணியம் பொற்புற வயங்க
அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.