Vallalar Universal Mission Trust   ramnad......
மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது
மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது
வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இதுநல்ல
மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்
மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ
சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே
சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ
பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்
பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்
சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று
தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.