Vallalar Universal Mission Trust   ramnad......
வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர் வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர் தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர்
வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர்
வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்
தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர்
சன்மார்க்க சங்கத் தவர்களே வென்றனர் அற்புதம்
வஞ்சமிலாத் தலைவருக்கே மாலைமகிழ்ந் தணிந்தேன்
மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத் துரைக்கும்
எஞ்சலுறா வாழ்வனைத்தும் என்னுடைய வாழ்வே
எற்றோநான் புரிந்ததவம் சற்றேநீ உரையாய்
அஞ்சுமுகம் காட்டியஎன் தாயர்எலாம் எனக்கே
ஆறுமுகம் காட்டிமிக வீறுபடைக் கின்றார்
பஞ்சடிப்பா வையர்எல்லாம் விஞ்சடிப்பால் இருந்தே
பரவுகின்றார் தோழிஎன்றன் உறவுமிக விழைந்தே.