Vallalar Universal Mission Trust   ramnad......
நெய்விளக்கே போன்றொருதண்ணீர்விளக்கும் எரிந்ததுசந் நிதியின் முன்னே.
மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக் கில்லைஎன்றார் மேலோர் நானும்
பொய்விளக்கே விளக்கெனஉட் பொங்கிவழி கின்றேன்ஓர் புதுமை அன்றே
செய்விளக்கும் புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்
நெய்விளக்கே போன்றொருதண்ணீர்விளக்கும் எரிந்ததுசந் நிதியின் முன்னே.

பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள்
பகிரண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர்
ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க
எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன்
சீர்உலவா யோகாந்த நடம்திருக்க லாந்தத்
திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப்
பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்
பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.

நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.