அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே
அம்மண்ட லந்தன்னிலே
அகலத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக்
கானவடி வாதிதனிலே
விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட
விளக்கும்அவை அவையாகியே
மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு
மெய்ந்நிலையும் ஆனபொருளே
தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத்
தலத்திலுற வைத்தஅரசே
சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம்
தானாய்இ ருந்தபரமே
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச்
சுகமும்ஒன் றானசிவமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
Write a comment