படிஅளவு சாம்பலைப் பூசியே சைவம்
பழுத்தபழ மோபூசுணைப்
பழமோ எனக்கருங் கல்போலும் அசையாது
பாழாகு கின்றார்களோர்
பிடிஅளவு சாதமும் கொள்ளார்கள் அல்லதொரு
பெண்ணைஎனி னுங்கொள்கிலார்
பேய்கொண்ட தோஅன்றி நோய்கொண்ட தோபெரும்
பித்தேற்ற தோஅறிகிலேன்
செடிஅளவு ஊத்தைவாய்ப் பல்லழுக் கெல்லாம்
தெரிந்திடக் காட்டிநகைதான்
செய்துவளை யாப்பெரும் செம்மரத் துண்டுபோல்
செம்மாப்பர் அவர்வாய்மதம்
மடிஅளவ தாஒரு மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே.
Write a comment