ஆங்காரம் தவிர்ந்தவருள் ஓங்கா நின்றவனே
அம்மே என் அப்பா என் அய்யா என் அரசே
ஓங்கார நிலைகாட்டி அதன்மேல் உற்றொளிரும்
ஒருநிலையும் காட்டி அப்பால் உயர்ந்த தனி நிலையில்
பாங்காக ஏற்றி எந்தப் பதத்தலைவராலும்
படைக்க வொணாச் சித்தியை நான் படைக்க வைத்த பதியே
தூங்காது பெருஞ்சுகமே சுகித்திட இவ் உலகைச்
சுத்த சன்மார்க்கம் தனிலே வைத்தருள்க விரைந்தே
நான் எனும் செருக்கை நீங்கச் செய்து அருள் அமுதம் சிறந்து ஓங்க நின்ற பெருமானே;; என் தாயாய், தந்தையாய் , தலைவனாய், அரசனாய் விளங்குகின்ற கடவுளே, ஓங்காரத்தின் நிலையைக் காட்டி அதன் மேல் உள்ளதாய் விளங்கும் ஒளிநிலையையும் காட்டினாய் அதற்கு அப்பாலாய் உயர்ந்து ஓங்கும் ஒப்பற்ற நிலையை உணரச்செய்து அதன் மேல் பக்குவமாக ஏற்றி அமரச்செய்தாய், எந்த நிலைத் தலைவராலும் பெறமுடியாத ஞான சித்தி நிலையை நான் பெறும்படியாக வைத்த தலைவனே;; தூங்காமல் விழிப்பு நிலையில் பெறக்கூடிய பெரிய சுகத்தை அனுபவிக்க இந்த உலகத்தைச் சுத்த ச்ன்மார்க்க நிலையில் என்றும் இருக்கச் செய்வாய், ஆண்டவனே. திரு அருட்பா தினசரி தியானம்,.....
Write a comment