Vallalar Universal Mission Trust   ramnad......
காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார்
காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார்
கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார்
கோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம்
குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார்
ஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே
அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார்
தேமாலை அணிகுழலாய் நான்செய்த தவந்தான்
தேவர்களோ மூவர்களும் செய்திலர்கண் டறியே.
 காமாலைக் கண்ணர்என்றும் கணக்கண்ணர் என்றும்
கருதுபல குறிகொண்ட கண்ணர்என்றும் புகன்றேன்
ஆமாலும் அவ்வயனும் இந்திரனும் இவர்கள்
அன்றிமற்றைத் தேவர்களும் அசைஅணுக்கள் ஆன
தாமாலைச் சிறுமாயா சத்திகளாம் இவர்கள்
தாமோமா மாயைவரு சத்திகள்ஓங் காரத்
தேமாலைச் சத்திகளும் விழித்திருக்க எனக்கே
திருமாலை அணிந்தார்சிற் சபையுடையார் தோழி.