Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
23.9.2021 திண்டுக்கல் பொன்னகரம் தயவு இல்லத்தில் நிலை வைக்கும் வைபவம் இன்று காலை நிறைவேறியது.
திண்டுக்கல்லில் பொன்னகரத்தில் சுவாமி சரவணானந்தா அவர்களின் நினைவு அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம் கட்டுப்பட்டு வருகின்றது. இன்று, 23.9.2021 காலையில், திரு அருட்பாவிலிருந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் முதலான பதிகங்கள், சன்மார்க்க அன்பர்களால், காலையில் பாராயணம் செய்யப்பட்டது. பின்னர் காலை 11.05 மணியளவில், தயவு இல்லத்திற்கு, நிலை வைத்தல் பணி மூத்த சன்மார்க்க அன்பர்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு எஸ்.எஸ்.சிவராம் ஐயா தலைமையில், மூத்த சன்மார்க்க அன்பர்கள், திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் பல்வேறு ஊர்களிலுமிருந்து வருகை புரிந்து, இந்த அருட் பணியினை நிறைவேற்றி வைத்தனர். இன்னும், வெளியூர் அன்பர்கள், வந்தால், தங்குவதற்கு, மேல் மாடியில், கட்டுமானப் பணி செய்யப்பட்டு வருகின்றது, இதுவரை அளித்த ஆதரவினைப் போல, உலகெங்கிலுமுள்ள சன்மார்க்க அன்பர்கள், போதுமான நிதி ஆதாரம் அளித்து, இப் பணி நிறைவேறுவதற்கு உதவும்படி, வேண்டிக் கொள்ளப்படுகின்றது.
vlcsnap-2021-09-21-15h41m26s698.png

vlcsnap-2021-09-21-15h41m26s698.png

vlcsnap-2021-09-21-14h51m23s882.png

vlcsnap-2021-09-21-14h51m23s882.png

vlcsnap-2021-09-21-14h52m13s579.png

vlcsnap-2021-09-21-14h52m13s579.png