Salem Suddha Sanmarga Sangam
தயவு திருவாளர் மதுரை IOB சந்ரசேகர் ஐயா சத்சங்கம் பிட்யூட்டரி மற்றும் பீனியல்


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி!!

பிட்யூட்டரி மற்றும் பீனியல் பற்றிய சுவாமி சரவணாணந்தரின் அறிவியல் மற்றும் ஆன்மீக விளக்கமும் சத்சங்கம்

தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
மேலெலாங் கட்டவை விட்டுவிட்டியங்கிட (1450)
என்பெலாநெக்கு நெக்கியலிடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட
இரத்தமனைத்து முள்ளிறுகிடச் சுக்கிலம்
உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட
மடலெலா மூளை மலர்ந்திடவமுதம்
உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட
ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட
தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட
உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்
கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட (1460)

வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்
கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட
மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட
மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
இனம்பெறு சித்த மியைந்து களித்திட
அகங்காரமாங்காங் கதிகரிப் பமைந்திடச்
சகங்காணவுள்ளந் தழைத்து மலர்ந்திட
அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்
பொறியுறு மான்மதற் போதமும் போயிடத் (1470)

தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்
சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட
உலகெலாம் விடய முளவெலா மறைந்திட
அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட
என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட
என்னுளத் தோங்கிய என்றனி யன்பே
பொன்னடி கண்டருட் புத்தமு துணவே
என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே
தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்
என்னைவே தித்த என்றனி யன்பே (1480)

என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடை யன்பே
என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து
என்னுளே கனிந்த வென்னுடை யன்பே
தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே
என்னுளே நிறைந்த என்றனி யன்பே
துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை
யின்புறு வாக்கிய என்னுடை யன்பே
பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா
என்னுளங் கலந்த என்றனியன்பே (1490)

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
கொல்லா நெறியே குருவருள் நெறி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐ð