DAEIOU - தயவு
10.11.2022 சிவகங்கை வள்ளலார் 200வது ஆண்டு விழாவினை சிறப்பாகக் கொண்டாட கலந்தாலோசனை.
சிவகங்கையில், வரவிருக்கும் 11.12.2022 ஞாயிற்றுக் கிழமை அன்று, வள்ளலார் 200 ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கிவரும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், கடந்த 10.11.2022 அன்று, சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் சன்மார்க்க சங்கத்தின் முக்கியஸ்தர்களை அழைத்து, ஆலோசனைக்கூட்டம் நடத்தியுள்ளனர்.  இந்த விழாவினை சிறப்பாக நடத்துவதற்கு சன்மார்க்க அன்பர்கள், ஒத்துழைக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்.