Anandha Barathi
தருமச்சாலை பெருந்தொண்டர் கட்ட முத்து பாளையம் நாராயணர்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!

சத்திய தருமச்சாலை வள்ளல் பெருமான் நிறுவிய நிலையங்களில் மிக முக்கியமான ஒன்று!

ஜீவகாருண்யத்தையும் அந்த ஜீவகாருண்யத்தின் வழி கடவுளை அடையலாம் என்பதையும் வள்ளல் பெருமான் தருமச்சாலையின் வழியே நமக்கு விளக்கிக் காட்டினார்கள். அத்தகைய சிறப்பு பொருந்திய ஆண்டவர் வாழுகின்ற தருமச்சாலையை கூரை கட்டிடத்திலிருந்து கல்கட்டிடமாக 1927 திருப்பணிகள் மேற்கொண்டார் கட்டமுத்து பாளையம் நாராயணர்.

வள்ளல் பெருமானின் அடித்தொண்டராக இருந்து, சாலைக்கு தன் உயிர் பிரியும் வரை பல்வேறு தொண்டாற்றி, வள்ளல் பெருமானின் பெருங்கருணையை பெற்றுக் கொண்டவர் அவர்.

அவரின் வரலாற்றை வள்ளல் பெருமானின் வழிவழித் தொண்டரான புலவர் சீனி சட்டையப்பர் ஐயா அவர்கள் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்கள்.

அதை வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு பெருமை பெற்றுள்ளது. அந்தப் பிரதியை நாமும் படித்து நாராயணரின் பெருமையை உணர்ந்து நல்வாழ்வு வாழ்வோம்.

நன்றி.

நூலின் பிரதியை தந்து உதவிய நடுப்பட்டு இளவல் அருள்ஜோதிக்கு நன்றி.  
Kattamuthu Palayam Narayanar 1.jpg

Kattamuthu Palayam Narayanar 1.jpg

Download: