கவிஞர். கங்கைமணிமாறன்
அலைகிறது ஆன்மா
ஆன்மாவின் அழுக்குச் சட்டைதான்
நம் உடம்பு.
ஒருநாள் துவைக்காவிட்டாலும்
நாறிப் போய்விடும்..!

அதனால்தான்
நித்தம் துவைக்கிறோம்.

ஆனால்...
வெளுக்கப்படாமல்
அழுக்காகவே
அலைகிறது..
ஆன்மா!