SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரை நான் ஏன் வணங்குகிறேன்
கட்டமும் கழன்றேன் கவலை விட்டொழிந்தேன் கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச் 
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்ந்தேன் 
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வ மெயப்பிள்ளை  என்றொரு பேர் ப் 
பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.  1003

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான் றும் 
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் --தேவா நின்
பேரருளை என்   போலப்  பெற்றவரும்   எவ்வுலகில் 
யார் உளர் நீ   சற்றே அறை...............1025

நானே தவம் புரிந்தேன் நம்பெருமான்  நல்லருளால் 
நானே அருட்சத்தி நாடடைந்தேன்---நானே 
அழியா வடிவம்  அவை மூன்றும்   பெற்றேன் 
இழியாமல் ஆடுகின்றேன்  இங்கு.........................1509

காற்றாலே புவியாலே ககனமதனாலே 
கனலாலே புனலாலே கதிராதியாலே 
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறவியற்றும் கொடுஞ்செயல்களாலே 
வேற்றாலே எஞ்ஞான் றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க   வேண்டும் என்றேன்   விரைந்தளித்தான்   எனக்கே
ஏற்றாலே இழிவென நினையாதீர்   உலகீர் 
எந்தை அருட்பெருஞ்சோதி இறைவனைச் சார்வீரே .........1733

தப்பாலே ஜகத்தவர் சாவே துணிந்தார்  தாமுள நாண நான் சாதலைத் தவிர்த்தே 
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் என் தோழி வாழி     நீ என்னோடு கூடி 
துப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்க ஜோதி என்றோதிய வீதியை விட்டே 
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து அருட்பெருஞ்சோதி கண்டு ஆடேடி பந்து.........1985

துதி செயும்   முத்தரும் சித்தரும் காணச் சுத்த சன்மார்கத்தில் உத்தம ஞானப்
பதி செயும்    சித்திகள்  ப ற் பலவாகப்  பாரிடை வானிடைப்    பற்பலகாலம்
 விதி செயப்  பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருட்ஜோதியால் விளைவிப்பன் நீ  அவ்
அதிசயம்  பார்க்கலாம் ஆடேடி   பந்து அருட்பெருஞ்சோதி கண்டு ஆடேடி பந்து......1990

எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக்கு அருள் புரிந்து 
எல்லார்க்கும் துணையாகி இருக்க வைத்தாய் எம்பெருமான் 
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்றாய் இவ்வண்ணம் 
எல்லார்க்கும் செய்யாமை யாது குறித்து இசை   எனக்கே.............1702

வள்ளலாரின் இந்த வார்த்தைகள் வீண்  வார்தைகளோ அல்லது    பொய்யான வார்த்தைகளோ அல்ல .
என்றும் அழியாத உடம்பு பெற்று அவர் இன்றும் எல்லோருக்கும் துணையாக இருக்கிறார் என்னையும் சேர்த்து.அருட்பெருஞ்சோதி அனுபவத்தை அடைய என்னாலான முயர்ச்சியும் செய்துகொண்டு     இருக்கிறேன், சமயத்   தெய்வங்கள் எதையும் லட்சியம் செய்யாமல் வள்ளலாரை மட்டுமே வணங்கி எந்தக் குறையும் இல்லாமல் மன நிறைவோடு    வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். இப்படி எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையால்தான் வள்ளலாரை வணங்குங்கள் என்று எழுதுகிறேன்.இனி உங்கள் விருப்பம்.நான் மாறவே மாட்டேன். ருசி கண்ட பூனை நான் வள்ளலார் வழிபாட்டில். நன்றி.என்னுடைய ஓய்வுத  ஊதியத்தில்   முடிந்தவரை அனாதையாகவும் ஆதரவற்றும் உள்ள குழந்தைகட்கு உணவுக்கு அனுப்புகிறேன்.
வள்ளலாரை வணங்குவதால் பலருக்கு என்னைப் பிடிக்கவில்லை.   கவலை இல்லை.
2 Comments
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Mu pa Ayyah in the last 45 days ago you have been trcelpijg wth annyar now when you suggest I will meet at your residence to get kind biessngsv Sathyam 8/1 Kasthuriba st Sarai chennai 600015 tel 044+243467893=42850216&996257886
Tuesday, February 13, 2018 at 17:19 pm by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Ellaam inba mayam anbu mayam abiseka aradhanai Selvi Kalai selivukalai manthra thanthra sakthikku parikaram the di Alayna theer
Tuesday, February 13, 2018 at 19:15 pm by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R