www.vallalarspace.com/durai
சும்மாவிருக்கும் சுகம் அருள்கவே

சும்மாவிருக்கும் சுகங்தந் தருள்கவே!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy  Limitless Grace-Energy
Limitless Unique Grace  Limitless Grace-Energy
Sanctum Sanctorum

வள்ளல் சொல்நின்று வாழ்ந்துவரும் அன்புடையீர்
வாழ்க வளமோடு இவ்வையகத்து அருளின்புற்றே
வழங்கும் நம்மார்க்கம் நமக்கிப்பத் துலங்குவதால்
வாழ்த்தெனவே கொள்வன் இனிவைதாலும் உலகு

மெய்மை உரைப்பதன்றி நானிங்கு வேறுகருதியே
பொய்மை உரைக்க ஒருபோதும் நினைந்தறியேன்
வாய்மையே உலகை வெல்லும் மென்றறிந்தேநற்
தூய்மை பொருந்திய சுத்தசன்மார்க்கர் வாழ்கவே

ஒத்தகருத் துடையோர் உளமிகும் அன்போடு
ஒருமித்துப் புரிகின்ற நல்லசத்து விசாரத்தால்
சித்தசுத்தி சித்திக்கும் திடதேகமும் நீடிக்கும்
சுத்தநற்சூடு நம்முள்ளே ஊற்றெழு மதனாலே

நெடுமொழி உரைக்கவே விழைகின்றேன் ஆயினும்
கொடுமொழி குரைக்கவும் நேர்கின்றேன் அடர்கரண
முடுக்கொழித்து முயன்று மடங்கடந்து கடைமரண
நடுக்கொழித்துச் சும்மாவிருக்கும் சுகம் அருள்கவே

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி த
னிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy   Limitless Grace-Energy
Limitless Unique Grace    Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All Possible, I swear on Divine Abode
Exalt HIM - the Almighty only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss!
Let the Grace-Feet reign Grace-Rule!

நன்றி, வணக்கம், சுபம்.
அன்புடன், அன்பன் துரை சாத்தணன்

2 Comments
ஸ்வாமி  இராஜேந்திரன்
நெஞ்சம் நெகிழும் கவிதை 😢! ஆண்டவர் மிக விரும்புவார். எல்லாம் செயல் கூடும் விரைவில்.
Thursday, January 19, 2017 at 20:20 pm by ஸ்வாமி இராஜேந்திரன்
Durai Sathanan
ஆண்டவர் கூற்றாகப் பாவித்து, மிகுந்த ஆனந்தம் அடைகின்றேன் ஐயா. மிக்க நன்றி! வளமோடு இன்புற்று வாழ்க! அருட்பெருஞ்ஜோதி ...
Friday, January 20, 2017 at 05:08 am by Durai Sathanan