DAEIOU - தயவு
12.7.2020 அகில உலக சன்மார்க்க சங்கங்கள்..ஒருங்கிணைப்பு..சுத்த சன்மார்க்க நெறி பரவ ஒரு முயற்சி.
   மாநில சன்மார்க்க சங்கத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை, உலக முழுவதும் கொண்டு செல்ல வேண்டுமென்ற ஒரு முய்ற்சியில் இறங்கியிருக்கின்றனர். ஜூம் செயலி மூலம், இணைய வழிக் காணொலிக் காட்சியின் வழியாக, இன்று (12.7.2020) ஞாயிறு மாலை 6.45 மணியிலிருந்து, இரவு 9.00 மணி வரையில் கீழ்க்காணும் சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்றுப் பேசினார்கள். முதல் நாள் என்ற வகையில் முக்கியமான சன்மார்க்க அன்பர்கள், பங்கேற்று, முகவுரையினையும், வாழ்த்துரையினையும் தெரிவித்தனர். 

திரு பாலகிருஷ்ணன், படப்பை (தலைவர்)
திரு வெற்றிவேல், ஆத்தூர். (செயலாளர்) 
திரு ஜானகிராமன், திருவண்ணாமலை.
திரு சிவகுமார், கோயம்புத்தூர்.
திருமதி மஞ்சுளா, (லதா பாலாஜி)
திரு ஜீவ.ஸ்ரீ நிவாஸன், திருக்கோயிலூர் (பாடல், வாழ்த்துரை)
திரு மழையூர் சதாசிவம் (பாடல்)
திரு சிவ.நடராஜன்
திருமதி தனலட்சுமி, அருள்ஜோதி தொலைக்காட்சி, பெரம்பூர்.
திரு சிவக்குமார், கோயம்புத்தூர்
திரு சந்துரு, மலேசியா.
திரு (டாக்டர்) விநாயக மூர்த்தி, சுங்கப் பட்டனி, மலேசியா.
திரு ராமலிங்கம், டெக்ஸாஸ், அமெரிக்கா
திரு ஷண்முக,ம், ஸ்ரீ ரெங்கம்.
திரு ரவிச்சந்திரன், தர்மபுரி
திரு தண்டபாணி, சென்னை (youtube propogator)
திரு ராமானுஜம், மதுரை.
திரு வெற்றிவேல், அய்யமுத்து.

   பங்கேற்றுப் பேசிய அனைவரும், உலகளாவிய அளவில் எல்லா நாடுகளிலுமுள்ள எல்லா சன்மார்க்க சங்கங்களும் இணைந்து, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை எல்லா மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் அதற்கான இந்த தருணத்தில் இந்த செயல்பாடு சிறப்பானதே என வாழ்த்துரை கூறினர்.

      வரவிருக்கும் 13.7.2020ந் தேதி முதல் மாலை 7.00 மணி முதல் இரவு  8.30  மணி வரையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்ட வாரியாக, இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது எனவும், அப்போது, அந்தந்த மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டு, தமது மாவட்டத்தில் நடைபெறும் சன்மார்க்க சஙகப் பணிகள் குறித்துப் பேச வேண்டும் என மாநில அமைப்பாளர்கல் கேட்டுக் கொண்டனர்.
20150119_184350.jpg

20150119_184350.jpg