DAEIOU - தயவு
7.2.2020 மற்றும் 8.2.2020 ஆகிய நாட்களில், வடலூரில் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்க கட்டிடம் கட்டுதல்.
      மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத்தின்  புதிய தலைவராக, கடந்த ஆண்டு (2019) மதுரை அனுப்பானடியில் முதியோர் இல்லம் நடத்தி வரும் திரு பெருமாள் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார். வடலூரில் மதுரை மாவட்டத்திற்கென அன்பர்கள் வந்தால் தங்கிச் செல்வதற்கென ஒரு கட்டிடம் இல்லை என்ற குறையைப் போக்க வேண்டும் என மிகுந்த ஆர்வம் கொண்டார். சன்மார்க்க சான்றோர்கள், மதுரை மாவட்டத்தில் வசிக்கும் பல் ச்ன்மார்க்க அன்பர்களின் ஆதரவுடன், நிதியினைத் திரட்டி, வரும் 7.2.2020 மற்றும் 8.2.2020 ஆகிய நாட்களில், தருமச்சாலை மற்றும் சன்மார்க்க சங்க கட்டிடம் விழாவினை நிகழ்த்துவதற்கு தீவிரமான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார். இந் நிகழ்ச்சிகளில், சன்மார்க்க சான்றோர்கள், அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி, அவர் கேட்டுக் கொள்கின்றார்.
vlcsnap-2019-02-22-15h54m37s809.png

vlcsnap-2019-02-22-15h54m37s809.png