தன்னிடம் இசை பயிலும் மாணாக்கர்களின் வேண்டுதலின் பேரில், திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள், வரும் 2018 ஜூலை மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார். ஆகஸ்ட் மாதம் வரை அங்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் அவர் அமெரிக்கா சென்ற போது, அமெரிக்கா வாழ் சன்மார்க்க அன்பர்கள் திரு துரை சாதனன், திரு பிரசன்னா சிவசுப்பிரமணியம் ஆகியோர் மற்றும் அமெரிக்கா வாழ் சன்மார்க்க அன்பர்களின் ஒத்துழைப்புடன், அங்கு திரு அருட்பா இசைக் கச்சேரி செய்தார். சன்மார்க்கம் பரவுவதற்கு, அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதே போல் இம்முறையும், அவர் செல்லும் போது, அமெரிக்கா வாழ் சன்மார்க்க அன்பர்கள், இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்தால், அங்கு அவர் திரு அருட்பா இசைக் கச்சேரி செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.
இச்செய்தி, அமெரிக்கா வாழ் சன்மார்க்க அன்பர்களின் மேலான கவனத்திற்கு......
இச்செய்தி, அமெரிக்கா வாழ் சன்மார்க்க அன்பர்களின் மேலான கவனத்திற்கு......
New Doc 2018-04-20_1.jpg
அவர் பயணம் சிறக்க வாழ்த்துகள் அருட்பிரகாசர் அருள் அமெரிக்காவில் மேலும் பொங்குக.......
Wednesday, May 23, 2018 at 01:56 am
by Thangaraj Aru
Write a comment