DAEIOU - தயவு
19.5.2017 கோயம்புத்தூர் கோயில் பாளையத்தின் தயவு சத்திய ஞான கோட்டத்தில் மண்டல பூஜை நடைபெறல்.
     கோயம்புத்தூர் ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனர் திரு ராம்தாஸ் அவர்கள், சரவணம்பட்டியில் இயங்கி வந்த தமது நிறுவனத்தை தனியே கோயில் பாளையம் என்ற இடத்தில் இடம் வாங்கி, தமது நிறுவனத்தை அங்கு கொண்டு சென்றார். அந்த நிறுவன வளாகத்தில், தயவு சத்திய ஞான கோட்டத்தைக் கட்டி, கடந்த 9.4.2017 அன்று கும்பாபிஷேகம் செய்தார். ஒரு மண்டலம் நிறைவுறும் நாளான 19.5.2017 அன்று, மண்டல பூஜை நடத்தவுள்ளார். அங்கு, தினந்தோறும், மாலையில், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெறுகின்றது. அங்கு பூஜகர் ஒருவரை நியமித்து, நேரப்படி, அருட்பெருஞ்ஜோதி வழிபாடு செய்யவும் திரு ராம்தாஸ் அவர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளார். 19.5.2017 அன்று நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்ளும்படி, சன்மார்க்க அன்பர்களை அவர் அழைக்கின்றார்.
20140902_113017.jpg

20140902_113017.jpg