Vallalar Universal Mission Trust   ramnad......
இருட்சாதிக் குப்பை-தத்துவச் சாத்திரக்குப்பை
வள்ளலார், ஒளிவு மறைவின்றி பாமரனும் புரிந்து கொள்ளக் கூடிய  ;' பாஷையிலேயே , பாணியிலே வருணம். மதம், சாதி//குலம் ஆகிய வேற்றுமைகளைச் சாடிப் பாடினார்
     நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
  நவின்றகலை சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே
    மேல்வருணம் தோல்வருணம்  கண்டறிவார் இலைநீ
விழித்திதுபார் என்றெனக்கு  விளம்பியசற்குருவே
    இருட்சாதித் தத்துவச் சாத்திரக்குப்பை
இருவாய்ப் புன்செயில் எருவாக்கிப்போட்டு
    மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழித்தொட்டி மண்மூடிப் போட்டுத்
தெருட்சாருஞ் சுத்த சன்மார்க்க நன் நீதி
சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும்
அருட்சோதி வீதியில் ஆடச் செய் தீரே
அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் நீரே''...வள்ளலார்