. காமாலைக் கண்ணர்என்றும் கணக்கண்ணர் என்றும்
கருதுபல குறிகொண்ட கண்ணர்என்றும் புகன்றேன்
ஆமாலும் அவ்வயனும் இந்திரனும் இவர்கள்
அன்றிமற்றைத் தேவர்களும் அசைஅணுக்கள் ஆன
தாமாலைச் சிறுமாயா சத்திகளாம் இவர்கள்
தாமோமா மாயைவரு சத்திகள்ஓங் காரத்
தேமாலைச் சத்திகளும் விழித்திருக்க எனக்கே
திருமாலை அணிந்தார்சிற் சபையுடையார் தோழி.
Write a comment