Vallalar Universal Mission Trust   ramnad......
அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே
அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே
ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார்
செறியாத மனச்சிறியேன் செய்தபிழை எல்லாம்
திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார்
பிறியாமல் என்னுயிரில் கலந்துகலந் தினிக்கும்
பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம்
அறிவாளர் புறப்புணர்ச்சி எனைஅழியா தோங்க
அருளியதீண் டகப்புணர்ச்சி அளவுரைக்க லாமே.