சிறியர் செய்பிழை பெரியவர் பொறுக்கும்
சீல மென்பதுன் திருமொழி அன்றே
வறிய னேன்பிழை யாவையும் உனது
மனத்தில் கொள்ளுதல் வழக்கல இனிநீ
இறையும் தாழ்க்கலை அடியனேன் தன்னை
ஏன்று கொண்டருள் ஈந்திடல் வேண்டும்
செறிய ஓங்கிய ஒற்றியம் பரமே
திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
Write a comment