வாடிய மழலைகள்!
துளிரும் மொட்டுக்களை அழித்த
துப்பாக்கி குண்டினை கேட்கிறேன்
தவழ்ந்த கொடியில் புகுந்து
துளைத்து சுகமென்ன கண்டாய்?
உளிபட்ட கல்லும் அழகிய
உருவமாகும், தலிபானின் கைப்பட்டு
உயிரும் மண்ணாகும், இனிகருணை
ஒன்றே உயிரெலாம் நிரையட்டும்!
வளிமண்டல மெலாம் வாழ்த்தட்டும்
விடைபெற்ற எங்கள் மழலைகளை!
வலியில்லா சமுதாயம் பாகிஸ்தானில்
வளரட்டும் எங்கும் அருள்
ஒளியே நீக்கமற நிரைந்தோங்கி
இவ்வுலகை நட்புடன் காக்கட்டும்!
அருளே நம்பெயர் அருளேநம்
உயிரென்ற ஆன்மநேயம் ஓங்கட்டுமே!
TMR84.jpg
Write a comment