விடுத்த மூச்செலாம் விண்ணவ னாகிட
எடுத்த மூச்செலாம் என்னவ னாகிட
இரண்டும் கலந்து இல்லாத தாகிட
மிரண்ட தேகமும் மின்னொளி யாகிட
இரத்த மனைத்தும் இராமலிங்க மாயிட
மரத்தில் கலந்து மகாமந்திர மாயிட
அலறிய குரலெலாம் அன்பே ஓங்கிட
மலர்ந்த இதழ்களில் மருந்தை ஊட்டிட
தத்துவ மெலாம் தன்ன தாகிட
இத்தவம் புரிய அமிழ்து சுரந்திட 1980
புருவ நடுவில் புருடன் கலந்திட
அருவ நிலை அன்றே வந்திட
உடம் பெலாம் உண்மை யாகிட
சடங் களெலாம் சிரித் தெழுந்திட
காய முழுதும் கற்பூரம் மணந்திட
மாய மதங்கள் மருண் டோடிட
இதயத் துடிப்பு இனிதாய் நின்றிட
உதயமாகி உத்தமன் உரு வாகிட
எல்லா உலகும் எதிர்நின்று வணங்கிட
பொல்லாப் பசியும் பறந்தே சென்றிட 1990
எல்லா உயிரும் இன்புற்று வாழ்ந்திட
வல்லா னெனை வருவிக்க உற்றிட
தயவைப் பெற்றே தலைவனைப் பாடிட
நயந்த ஐந்தொழிலை நான்செய்ய தந்திட
ஆன்மக் குறிகளில் இன்பம் பொங்கிட
வான் கலந்தோரெலாம் வந்து வணங்கிட
சிலிர்த்த முடியொன்று செத்தாரை எழுப்பிட
வலிந்து சித்தெல்லாம் விரும்பி கொடுத்திட
என்னதவம் செய்தனோ என்றே முழித்திட
அன்ன தான மளித்தாய் என்றேமுழங்கிட 2000
வாழ்க நின்னருள் வளர்க நின்பொருள்
ஏழ்திரை விலக்கிய அருட்பெருஞ் ஜோதி
வாழ்க நின்கொடை வளர்க நின்படை
ஊழ்வினை அகற்றிய அருட்பெருஞ் ஜோதி
புனைந்த வாறே புனைந் துரைத்தேன்
எனையும் புனர்ந்த அருட்பெருஞ் ஜோதி
வாழ்கநின் மனிதம் வாழ்கநின் ஆன்மம்
வாழ்கநின் இயற்கை வாழ்கநின் இறைமை
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி 2010
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqbUlBZGQ5eDBNYlU/view?usp=sharing