சன்மார்கத்தில் உள்ள ஒரு சிலர் வள்ளலாரை வணங்க வெனடாம் என்று அதி தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.அவர் தன்னை வணங்க வேண்டாம் என்றுதான் சொன்னார். அவர் அப்படிச் சொன்னது அவாது பெருந்தன்மை அடக்கம்.அவரைத் தெய்வமாக வணங்கவே எவ்வளவோ தகுதிகள் இருந்தும் அவற்றைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியம் செய்கிறார்கள். மனுமுறை கண்ட வாசகத்தில் நாம் செய்யக்கூடிய 43 பாவங்களை வள்ளலார் பட்டியல் போட்டுத் தந்துள்ளார் அதில் 25 வது பாவம் குருவை வணங்கக் கூசி நின்றேனோ என்பது. தெய்வமாக வணங்க விருப்பம் இல்லாதவர்கள் அவரைக் குருவாகவாவது வணங்க வேண்டும். இல்லையேல் பாவம் செய்தவர்கள் ஆவார்கள். வள்ளலாருடைய ஒரிஜினல் படம் இல்லையே என்று காரணம் சொல்லலாம். சமயத்தில் சிவன்,முருகன், விநாயகர் முதலியோரை ஒரிஜினல் உருவம் வைத்தா வணங்குகிறார்கள். கையில் சூலம் வைத்தால்,சிவன் வேல் வைத்தால் முருகன் இப்படித்தானே வணங்குகிறார்கள். அந்த பண்பாடாவது நமக்கு வேண்டாமா.மனித உருவில் கைகளைக் கட்டி முக்காடு போட்டால் வள்ளலார் .நன்றியுடன் வணங்க வைப்பதும் மனம்தான். மறுப்பதும் மனம்தான் . அவரவர்கட்கு அந்தந்த பலன்.
3 Comments
திரு மு. பா ஐயா அவர்களுக்கு வள்ளல் பெருமானின் அருளால் ஏற்பட்ட பல அனுபவங்களில் ஒரு சிலவற்றையாவது நாம் பெற்றாலே அதுவே நமக்கு பாக்கியம்.