Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
மனோன்மணி...நெற்றிக் கண்...சுவாமி சரவணானந்தா.
      மனத்தை இடைவிடாது புருவ மத்தியில் இருக்கச் செய்யும் பழக்கத்தில், ஒருமைப்பட்ட மனம், புருவ நடுவில் மலர்ந்த வெண் தாமரை போல் விளங்க, அம்மலர் நடுவே ஓர் ஒளி தோன்றி விரிகின்றது. இதுவே மனத்தின் கண்ணாகும். இந்த கண்ணைக் கொண்டு தயவோடு உலகை நோக்கினால், பிரபஞ்ச சிருஷ்டி இர்கசியமெல்லாம் வெள்ளிடை மலையென விளங்கும்.

     அம்மனக் கண்ணிலே விரிகின்ற ஒளிக்குள்ளீடாய் கடவுட் ஜோதி பொருந்தியுள்ளது. இச்சோதியுட் சோதியே உலகில் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து செயல்களையும் புரிந்து கொண்டுள்ளதாம். மாசிலா மனோன்மணிக்கு உண்ணின்று ஐந்தொழில் வெளிப்பட்டுக் கொண்டேயுள்ளதால் சீவ தேகாதி பிரபஞ்சம் எல்லாம் விளங்குகின்றனவாம். அகர வுகரம் சேர்ந்த யகரமாகிய ஆன்மாவே மனோன்மணியின் உள்ளிருந்து மலர்கின்ற ஒளியாகும். இவ் ஆன்மக் கண்ணே ஒரு பூட்டாகக் கூறப்பட்டது. இப்பூட்டை திறந்து உட்சென்றால்தான் கடவுள் வீடு அடையலாகும். அகரமாகிய கடவுள் உண்மையும், உகரமாகிய சுத்த மனோ உணர்வும் கூடியதே, யகரமாகிய ஆன்மக் கண்ணாம். அகரம் எட்டு, உகரம் இரண்டு, இவ்வெட்டும் இரண்டும் சேர்ந்த பத்தே யகர ஆன்மா என்ப.

     மேற்குறித்த ஆன்மக் கண்ணாகிய பூட்டைத் திறப்பதற்கு உள்ள பொதுத் திறவுகோல் ஓர்மை தயவே ஆகும். நடுக்கண்ணுக்குள் ஒளி செய்யும் மணியாகவுள்ளது கடவுட் தயா சோதியே. இத்தயா ஒளியையே ஆலயமாகக் கொண்டு விளங்குகின்றது. எல்லோர்க்கும் பொதுவாய் நம் பதி, நித்திய ஞாயிறு போன்று நிலைத்து ஒளிரும் கடவுட்குத் தயாசோதிக் கண்மணியே சத்திய ஞான அம்பலமாகத் திகழ்கின்றதாம். ஆதலின், கடவுள் உண்மை காண முதற்கண் இந்நுதற் கன்ணைத் திறக்கப் பெற்றுக் கொள்ள வேண்டும். இது திறக்க பெறுவதே திருவம்பலத் திருக்கதவம் திறக்கப்படலாகும்.

           மனத்திலே எப்போதும் ஒளிவீசிக் கொண்டிருக்கும் தயாமணியை அகத்திலே இருத்திக் கொண்டு, புறத்திலே உலகியற் பணிகளைச் செய்து வரல் வேண்டும்.
vlcsnap-2019-02-08-21h47m28s439.png

vlcsnap-2019-02-08-21h47m28s439.png