Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திரு அருட்பா தொகுப்பு....என்னும் நூலிலிருந்து...சுவாமி சரவணானந்தா.
மருந்தானை மணியானை வழுத்தா நின்ற 
   மந்திரங்க ளானானை வான நாட்டு
விருந்தானை உறவானை நண்பி னானை
   மேலானைக் கீழானை மேல்கீழ் என்னப்
பொருந்தானை என்னுயிரில் பொருந்தி னானை
   பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும்
இருந்தானை இருப்பானை இருக்கின் றானை
   எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.      (காட்சிக் களிப்பு)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

அருட்ஜோதியே மணி, மந்திர, மருந்தும் மற்றெல்லாமுமாய்க் கண்டு, அருளால் பெற்றுக் களித்திருத்தல் கூறப்படுகின்றது.
20150405_082947.jpg

20150405_082947.jpg