Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுப் பாக்கள்..எண்.141 பதினைந்தாம் அதிகாரம் .. கற்பனை .. சுவாமி சரவணானந்தா.
கற்பனையா நன்றிக் கருத்தோங்கி யுண்மையின்
பொற்பறிய மாட்டாப் புரிந்து.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

குறள் விளக்கம்.

     மனோ சிந்தனை. கற்பனா சக்தியினால்தான் வளர்ச்சி பெறுகின்றது. அகத்தும் புறத்தும் நிறைந்துள்ள பொருள்களின், செயல்களின் தத்துவ உண்மைகளை எல்லாம் அறிந்து கொள்ள மனத்திற்கு, நல்ல வளர்ச்சி பெற்ற கற்பனா சக்தி வேண்டியுள்ளது.

     முன் குறிப்பிட்ட மனோ கரண நானிலை ஒழுக்கத்தால், உள்ள அம்பலத்தில் தெய்வப் பொற்பு ஒளி விடுகின்றது. இதனை வெளிப்படுத்திப் பிறர்க்கு உயர்த்தவே இக்கற்பனை நமக்குப் பயன்படுகின்றது.
IMG_20150802_095338.jpg

IMG_20150802_095338.jpg