DAEIOU - தயவு
சிற்றடியேன் நுமது தாள் வணங்கிச் சாற்றுகின்றேன்..தயவினொடும் கேட்பீர்..வள்ளலார்.
வடலூரில் வள்ளற்பெருமானாரால், 1865ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் கடந்த 10 நாட்களாக, பல்வேறு மாவட்டங்களிலுமிருந்து, 10 ஆண்டு அங்கத்தினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. 22.10.2020ந் தேதி வரையில் பல்வேறு மாவட்டங்களிலுமிருந்து, கிட்டத்தட்ட 250க்கு மேற்பட்ட  சன்மார்க்க அங்கத்தினர்கள் ரூ.500/- ஒவ்வொருவரும் செலுத்தி, தம்மை, வள்ளற் பெருமானுடன் இணைத்துக் கொண்டுள்ளனர். இவர்களில், இங்கிலாந்து அன்பர் ஒருவரும், ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 அன்பர்களும், அயரலாந்தைச் சேர்ந்த ஒரு அன்பரும், மலேசியாவைச் சேர்ந்த 3 அன்பர்களும் அடங்குவர்.

       இன்னும், தத்தம் கைகளில் செலுத்துச் சீட்டு வைத்திருக்கும் அன்பர்கள், வாட்ஸ் அப் மூலம், அதனைப் பதிவிடக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. இந்த அங்கத்தினர் சேர்க்கை என்பது, ஏற்கனவே உள்ள மாவட்ட சங்கத்தில் சேர்ந்துள்ளது குறித்த பதிவையும், வடலூர் தலைமைச் சங்க அங்கத்தினர் உறுப்பினராகச் சேர்ந்ததற்கும், எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. 

     வள்ளற் பெருமான் 1865ஆம் ஆண்டில் தோற்றுவித்த தெய்வ நிலையத்தில் நேரடியாக, ஒவ்வொரு சன்மார்க்க அன்பரும் தம்மை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்வதால், பெருமானுடன் நேரடித் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளும் உணர்வு, ஒவ்வொரு சன்மார்க்க அன்பருக்கும் கிடைக்கப் பெறும். 

      எனவே, 10 ஆண்டுக்கால உறுப்பினர் சேர்க்கையினை எல்லா மாவட்ட சன்மார்க்க சங்கங்களும் துரிதப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.


vlcsnap-2019-06-10-14h57m26s469.png

vlcsnap-2019-06-10-14h57m26s469.png

2 Comments
Daeiou  Daeiou.
Thiru Perumal ayya Dt.President Madurai. attended Vadalur today (23.10.2020) and remitted Rs.5,500/-at Vadalur Vallalar Deiva Nilayam collected from 11 sanmarga anbargal.
Friday, October 23, 2020 at 05:09 am by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
On 22.10.2020.. 13 sanmarga anbargal of Thiruvarur Dt.remitted Rs.6500 as membership fees @ Vallalar Deiva nilayam at Vadalur..
Friday, October 23, 2020 at 05:14 am by Daeiou Daeiou.