தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கர விழா, 144 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த ஆண்டு, அக்டோபர் மாதத்தில் அகில பாரதிய துறவியர் மாநாடாக நடத்தப்பட்டது. லட்சோப லட்சம் பக்தர்கள் வயது வித்தியாசம் இல்லாமல், தமது குடும்பத்தாருடன் வருகை புரிந்து புனித நதியில் நீராடிச் சென்றனர். 13 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில், வள்ளற் பெருமான் அருளிய சுத்த சன்மார்க்க நெறியினை பாபநாசம் வரும் பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், திருவண்ணாமலை திரு பாபு சாது தனது குழுவில் உள்ள அன்பர்களுடன் வந்து, சேனை தலைவர் மஹாலில், 21.10.2018 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையில், மூத்த சன்மார்க்க அன்பர்களின் மூலம், சுத்த சன்மார்க்க சொற்பொழிவு, திரு அருட்பா பாடுதல், வள்ளற் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினை வில்லுப்பாட்டு மூலம், மக்களுக்குத் தெரிவித்தல் என, பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். அவரது முயற்சிக்கு வாழ்த்துக்களை சன்மார்க்க அன்பர்கள் அவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
செல் எண்.95977 19535, 88385 40176.
செல் எண்.95977 19535, 88385 40176.
vlcsnap-2018-10-22-18h46m06s222.png
vlcsnap-2018-10-22-18h47m41s264.png
vlcsnap-2018-10-22-18h50m12s698.png
Write a comment