DAEIOU - தயவு
12.8.2018 தேனி மாவட்டம் தாத்தாவூரணியில் சன்மார்க்க நிகழ்ச்சி நடைபெற்றது.
     மேற்காணும் விழாவிற்கென, முதல் நாளான 11.8.2018 (சனிக்கிழமை) அன்றே மழையூர் திரு சதாசிவம் அவர்கள் வருகை புரிந்து, திரு அருட்பா கச்சேரி செய்தார். அன்பர்கள் பக்தி வயப்பட்டனர்.

     மறு நாள் 12.8.2018 (ஞாயிறு) அன்றும், காலை 10.00 மணி அளவில். அவர் இரண்டாம் நாளாக திரு அருட்பா கச்சேரி செய்தார். இவ்விழாவிற்கு, கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ திரு சின்னத்தம்பி அவர்கள், தம்முடன் 10 அன்பர்களையும் அழைத்து வந்திருந்தார். நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ....என்ற பாடல் பாடி முடித்ததும், அவர், மழையூர் திரு சதாசிவம் அவர்களுக்கு, ரூ.2,000/- அன்பளிப்புச் செய்தார். விழா மிகச் சிறப்பாக நடைபெற்று, அன்னதானத்துடன் நிறைவடைந்தது.
1432741756728.jpg

1432741756728.jpg