DAEIOU - தயவு
வள்ளலார் யுனிவர்சல் மிஷனில் கலந்துரையாடுவதற்கு மாவட்டந்தோறும் அன்பர்களின் குழுக்களின் பெயர்கள் கேட்டல்.
    அமெரிக்காவில், வள்ளலார் யுனிவர்சல் மிஷன் செயல்பட்டு வருகின்றது. வாரந்தோறும், மூத்த சன்மார்க்க அன்பர்களை சுத்த சன்மார்க்க நெறி குறித்து, சொற்பொழிவு நிகழ்த்தும் பணி, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக, இதன் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சன்மார்க்கச் சான்றோர்கள், தமது சொற்பொழிவினை ஆற்றி வருகின்றனர்.

    இதன் ஒரு அங்கமாக, மாதந்தோறும், கலந்துரையாடல், சன்மார்க்க சங்கத்தில் செயல்பாடுகள், சொற்பொழிவு, ஐயந்தெளிவுறல், திரு அருட்பா சேர்ந்து அல்லது ஒரு நபராகப் பாடுதல், சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெறும் விதத்தில், நடத்தலாம் என, மிஷன் ஏற்பாடு செய்து வருகின்றது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் ஏனைய மாநிலங்களில் உள்ள சன்மார்க்க அன்பர்கள், ஒரு குழுவாக இணைந்து, (சுமார் 8 பேருக்குள்) இதில் பங்கு பெறலாம். விருப்பமுள்ளவர்கள், இந்த இணைய தளத்தில், எந்த ஊர் சன்மார்க்க சங்கம்,,எந்த மாவட்டத்தில் உள்ளது. பேசுபவர்கள் யார் யார் என்ற விபரத்தைத் தெரிவித்தால், அதற்கான ஏற்பாட்டினை மிஷன் செய்யவுள்ளது. எனவே ஆர்வமுள்ள அன்பர்கள், தத்தமது குழுவினரின் பெயர்களைத் தெரிவிக்க வேண்டப்படுகின்றது...இது ஒரு அரிய சந்தர்ப்பம்..எனவே, இதனை பயன்படுத்தி, குழுக்களின் பெயர்களைத் தெரிவிக்க வேண்டப்படுகின்றது.
IMG_20171217_153807.jpg

IMG_20171217_153807.jpg

3 Comments
thiruma valavan
I am ready to speak about sathvicharam in Sanmarkkam. Now I speak continuously in YouTube about “thirumularum maranamilap peruvazhvum”. Thank you.
Thirumavalavan
Chennai
9840348094
Tuesday, March 6, 2018 at 09:56 am by thiruma valavan
Daeiou  Daeiou.
மேற்காணும் அறிவிப்பினைக் கண்ட பின், பல்வேறு அன்பர்கள், சொற்பொழிவாற்றுவதற்கு முன் வந்து, தமது அலைபேசி எண் அல்லது தாங்கள் ஏற்கனவே சொற்பொழிவாற்றிய..அந்த யூ.ட்யூப்..முதலானவற்றை தெரிவித்து வருகின்றனர்.

இதில் முக்கியம் என்னவெனில், சொற்பொழிவு செய்தபின்னர், அதனைக் கேட்டுக் கொண்டிருக்கும் அன்பர்கள், தத்தமக்கு ஏற்படும் சந்தேகங்களைக் கேட்பார்கள். அவர்களுக்கு, சரியான பதிலை சொற்பொழிவாற்றும் அன்பர்கள் தெரிவிக்க வேண்டும். எந்தக் கேள்வி, எந்த நாட்டு அன்பர் என்ன கேட்பார் என்பது, சொற்பொழிவைக் கேட்ட பின்னர், அவர்கள் கேட்பதைப் பொறுத்து உள்ளது. எனவே, ஆர்வத்தில் பெயர்களைத் தெரிவிக்கும் அன்பர்கள், இவ்விதமான நிலைக்கும் உட்பட வேண்டியிருக்கும்...என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
Wednesday, March 7, 2018 at 00:57 am by Daeiou Daeiou.
thiruma valavan
அறிந்து கொண்டோம். மிக்க மகிழ்ச்சி.
திருமாவளவன்.
Thursday, March 8, 2018 at 06:19 am by thiruma valavan