DAEIOU - தயவு
மேட்டுக்குப்பத்தில் ஒரு கோடி முறை அருட்பெருஞ்ஜோதி மகா மந்திர ஜெபம்.
3.11.2017 அன்று மேட்டுக்குப்பத்தில், திருவருள் விலாசத்தில் துவங்கிய அருட்பெருஞ்ஜோதி மகா மந்திர ஜெபம், தொடர்ந்து 11வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேட்டுக் குப்பத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள், ஓய்வு நேரத்தில், இங்கு வந்து மகா மந்திர ஜெபம் செய்கின்றனர். மேலும், விடுமுறை நாட்களில், அவர்கள், அனைவரும் வருகை புரிந்து, இந்த ஜெபத்தில் பங்கேற்கின்றனர். 

மேலும், அங்கு, கோவை தவத்திரு சிவப்பிரகாச சுவாமிகள், தம் இல்லத்தில் வசிக்கும் மாணவ, மாணவியரையும் அனுப்பு, இந்த மகா மந்திர ஜெபத்தில் கலந்து கொள்ளச் செய்துள்ளார். மற்ற மாவட்டங்களிலுமிருந்து வந்து சன்மார்க்க அன்பர்கள் இந்த ஜெப வேள்வியில் பங்கேற்கின்றனர். 48 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மகா மந்திர ஜெபத்தில், எல்லா மாவட்டங்களிலுமிருந்தும் சன்மார்க்க அன்பர்கள், திரளாகக் கலந்து கொண்டு, சிறப்பிக்கும்படி, திரு எம்.ஏ.வெங்கட் கேட்டுக் கொள்கின்றார். தங்குமிடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை அவர் செய்துள்ளார்.
Atmanathan receiving..jpg

Atmanathan receiving..jpg