இன்று 23.9.2017 (சனிக்கிழமை) காலை 11.30 மணி அளவில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மூங்கில் ஊரணியில் உள்ள வள்ளலார் கோயிலில், மாதாந்திர விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திரு அருட்பா பாடல்கள் பாடி, அருட்பெருஞ்ஜோதி தரிசனம் காண்பித்து சுமார் 40 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இன்று காலை மட்டுமே பள்ளி என்பதால், மாணவ, மாணவியர் பெருவாரியாகக் கலந்து கொண்டனர். மீதமுள்ள உணவு, நூறு நாள் வேலைக்குச் சென்று திரும்பும் கிராம மக்களுக்கு வழங்கப்படும் என நிறுவனர் திரு ஜெயராம், திருமதி வள்ளி ஆகியோர் தெரிவித்தனர். திருமதி திருவம்மா, பள்ளிக்குச் சென்று ஆசிரியப் பெருமக்களிடம் இது குறித்துத் தெரிவித்து, குழந்தைகள், வருவதற்குப் பேருதவி செய்தார்.
20140902_113017.jpg
Write a comment