வள்ளலார் பன்னாட்டுக் கருத்தரங்கம், வரும் 4.2.2017 மற்றும் 5.2.2017 ஆகிய இரு நாட்கள், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது. இது குறித்த செய்தி மற்றும் எந்தெந்தத் தலைப்புக்களில், கட்டுரை அனுப்ப வேண்டும் என்ற விபரமெல்லாம், கடந்த இரு மாதங்களாக, இந்த இணைய தளத்தில் அவ்வப்போது வெளியிடப்பட்டுள்ளன.
வரவிருக்கும் 31.10.2016 அதற்கான இறுதி நாளாகும். சென்னை குரோம்பேட்டை மூத்த சன்மார்க்க ஐயா திரு சங்கரய்யா போன்றோர், கட்டுரை எழுதி அனுப்பி விட்டார். அதுபோல், இன்னும் சிலரும் கட்டுரையினை எழுதி அனுப்பி வைத்துள்ளனர். இந்தக் கருத்தரங்கில் பேச விரும்புவோர், அதற்கான தொகையினைச் செலுத்தி, கட்டுரையினை, 31.10.2017ம் தேதிக்கு முன்னர் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அன்பர்களின் தகவலுக்காக, மீண்டும் ஒரு முறை, இதற்காக வெளியிடப்பட்ட பிரசுரங்கள் இங்கு மீண்டும் இடம்பெறுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி, செலுத்த வேண்டிய தொகை விபரம் முதலானவை, அந்த பிரசுரத்தில் உள்ளன. எனவே, மேலும் கால தாமதம் செய்யாது, உடனடியாக, கட்டுரையினை அனுப்பி வைக்கும்படி சன்மார்க்க அன்பர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வரவிருக்கும் 31.10.2016 அதற்கான இறுதி நாளாகும். சென்னை குரோம்பேட்டை மூத்த சன்மார்க்க ஐயா திரு சங்கரய்யா போன்றோர், கட்டுரை எழுதி அனுப்பி விட்டார். அதுபோல், இன்னும் சிலரும் கட்டுரையினை எழுதி அனுப்பி வைத்துள்ளனர். இந்தக் கருத்தரங்கில் பேச விரும்புவோர், அதற்கான தொகையினைச் செலுத்தி, கட்டுரையினை, 31.10.2017ம் தேதிக்கு முன்னர் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அன்பர்களின் தகவலுக்காக, மீண்டும் ஒரு முறை, இதற்காக வெளியிடப்பட்ட பிரசுரங்கள் இங்கு மீண்டும் இடம்பெறுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி, செலுத்த வேண்டிய தொகை விபரம் முதலானவை, அந்த பிரசுரத்தில் உள்ளன. எனவே, மேலும் கால தாமதம் செய்யாது, உடனடியாக, கட்டுரையினை அனுப்பி வைக்கும்படி சன்மார்க்க அன்பர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
IMG_20160809_152425.jpg
IMG_20160809_152502.jpg
IMG_20160809_152516.jpg
IMG_20160809_153458.jpg
IMG_20160809_153911.jpg
IMG_20160809_153917.jpg
Write a comment