DAEIOU - தயவு
26.10.2014..சேலம் மாநாடு...மலேசிய மக்களின் கருணை உள்ளம்...
26.10.2014 அன்று, சேலம் நெய்க்காரப்பட்டி பொன்னாக் கவுண்டர் திருமண மண்டபத்தில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் 192வது வருவிக்கவுற்ற நாள் விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.



    மலேசியாவிலிருந்து, சிறப்பு விருந்தினராக, திருமதி டாக்டர் லலிதா வீரையா அவர்கள், இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அகமகிழ்ந்தார்.

    ஒரு சிறு குழந்தை திரு அருட்பாவிற்கு இசையுடன் கூடிய நடனம் ஆடியதைக் கண்ட திருமதி டாக்டர் லலிதா வீரையா அவர்கள், உடனே, மேடைக்கு அந்தக் குழந்தையை அழைத்து, வெகுமதியினை அளித்தார்.

    கலந்து கொண்ட ஏனையோரிடமிருந்து, வெறும், கைதட்டலை மட்டுமே பெற்ற அந்தக் குழந்தைக்கு மலேசிய மண்ணிலிருந்து வந்த டாக்டர் லலிதா வீரையா அவர்கள் மூலம், ஜீவகாருண்ய உணர்ச்சியாக அந்த வெகுமதி கிடைத்தது.