DAEIOU - தயவு
வள்ளலாரின் திரு அருட்பா மலேசியாவில் பல்லக்கில் வைத்து பவனி வந்தது.
1924ஆம் ஆண்டு பஜனை ச.மு.கந்தசாமி ஐயா அவர்களின் திரு அருட்பா (6 திருமுறைகளின் தொகுப்பு) மறு அச்சு செய்யப்பட்டு, சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கும் திரு வெங்கட் அவர்களால், மேட்டுக்குப்பத்தில், கடந்த 21.9.2014 அன்று சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் வெளியிடப்பட்டது. அன்று அங்கு வந்து வாங்கிச் சென்ற ச்ன்மார்க்க அன்பர்களில், மலேசியாவில் இருந்து வந்து வாங்கியவர்களும் உண்டு.

    வாங்கிய அந்த அன்பர், திரு அருட்பாவினை மலேசியாவிற்குத் திரும்பி, கோலாலம்பூர் நகரின் முக்கியமான தெருக்களில், பல்லக்கில் வைத்து பவனி் வரச்செய்துள்ளார். தமிழகத்திலே யாரும் செய்யாததை மலேசியாவினைச் சேர்ந்த அன்பர் இவ்விதம் செய்துள்ளார்.

     இதனை மலேசியாவிற்கு 12.10.2014 அன்று விழாவில் கலந்து கொள்ளச் சென்ற திரு வெங்கட் அவர்கள் அறிந்துள்ளார். இவ்விதம், 6 திருமுறைகளும் ஒரு சேர மறுஅச்சு செய்து வெளியிட்ட அந்தப் பிரதியினை வாங்குவதற்கு, இந்த பல்லக்கு பவனி, முக்கியமானதாக அமைந்துள்ளது.

     அவ்விதம் செய்த அன்பரின் பெயரை, இந்த இணைய தளத்தினைக் காணும் அன்பர்கள், வெளியிட வேண்டப்படுகின்றது.

Venkat Arutpa.jpg

Venkat Arutpa.jpg

Venkat Photo.jpg

Venkat Photo.jpg

Audio: