தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் சன்மார்க்க சங்கத்தை நடத்தும் இந்த அன்பர், கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறிகளில் தீவிர பற்றுக் கொண்டு, கடந்த பல ஆண்டுகளாக, சோளவந்தானில் சன்மார்க்க சபை/சங்கம் நடத்தி, அன்னதானம் செய்து வருகின்றார். அவர், இம்முறை, வள்ளற் பெருமானின் அவதார நாள் விழாவிற்கு, இலங்கை சாவகச்சேரி, வேம்பிராய் மீசாலையில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்திற்குச் செல்லவுள்ளார். இந்தியாவிலிருந்து இந்த அன்பர் வருகின்றார் என்றதும், திரு கேதீஸ்வரன் அவர்கள், சத்திய ஞான கோட்டத்தில், இந்த விழாவில் கொடி ஏற்றும் பொறுப்பினை, இவர்பால் கொடுத்துள்ளார். இலங்கைக்குச் சென்று சன்மார்க்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு இவருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும், வள்ளற் பெருமானும் துணை நிற்க வேண்டுவோம்.
Thursday, September 18, 2014 at 10:40 am
by Daeiou Daeiou.
Write a comment