DAEIOU - தயவு
மதுரை மீனாட்சியம்மனே அருட்பெருஞ்ஜோதியாய் கருணை புரிந்தது.
     இன்றைய (17.9.2014) டைம்ஸ் ஆப் இந்தியா மதுரைப் பதிப்பில், வந்த ஒரு செய்தி.

      மதுரை அருள்மிகு மீனாட்சியம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கும் வேட்டி முதலான துணிகளை, மதுரை ராஜாஜி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஏழைகளுக்கு, அம்மனின் அருட்பிரசாதத்துடன் கோவில் நிர்வாகமும், ஆஸ்பத்திரி நிர்வாகமும் இணைந்து வழங்குகின்றன. இதுவரை, 5,000க்கும் மேற்பட்ட வேஷ்டிகள், இவ்வாறு, ஏழை எளியோராய், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோரில் அடுத்து உடுத்துவதற்கு ஆடை இல்லாதவர்களுக்கு வழங்கப்படுவதாய் செய்தி வெளிவந்துள்ளது.

      அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெருங்கருணையே, அருள்மிகு மீனாட்சி அம்மனின் கருணையாய்ப் பரிணமித்துள்ளது.

கருணைநிறைந்து அகம்புறமும் துளும்பிவழிந்
துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித்
தெருள்நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற
கண்ணுடையோய் சிதையா ஞானப்
பொருள்நிறைந்த மறையமுதம் பொழிகின்ற
மலர்வாயோய் பொய்ய னேன்றன்
மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையும்உட்
கசிந்துருக்கும் வடிவத் தோயே.. ...........................................(திரு அருட்பா)
vlcsnap-2014-03-23-10h45m17s127.png

vlcsnap-2014-03-23-10h45m17s127.png

20140917_213812.jpg

20140917_213812.jpg

20140917_213818.jpg

20140917_213818.jpg

20140917_213910.jpg

20140917_213910.jpg

vlcsnap-2014-03-19-11h36m16s196.png

vlcsnap-2014-03-19-11h36m16s196.png

vlcsnap-2014-03-23-10h47m20s81.png

vlcsnap-2014-03-23-10h47m20s81.png

vlcsnap-2014-03-25-19h27m12s252.png

vlcsnap-2014-03-25-19h27m12s252.png