www.vallalarspace.com/durai
மெய்ஞானத்தனியின்பம் என்பது சுத்த சிவானுபவமே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்


பாட்டில் திருமுறைகள் அனைத்தும் ஓதியும்
நாட்டில் திருத்தலங்கள் எல்லாம் தரிசித்தும்
காட்டில் கடுந்தவம் கற்பம்பல முயற்சித்தும்
கூட்டில் இருப்பவர் கூடாது கூற்றுக்குஇரையே!

தட்டில் பற்பம் தினம்தங்கமே உண்பினும்
ஏட்டில் பதவுரைகள் பற்பலவே புரட்டினும்
விட்டில் பூச்சிகள் விஞ்ஞானம் பிதற்றினும்
கூட்டின் கோன்அவர் குலவாது குழிவிழுவரே!

 

தேட்டுக் கரிய செல்வங்கள் இருப்பினும்
மேட்டுக் குடிகளின் கோமகன் ஆயினும்
பாட்டுக் குரிய சூர்ணிகை அறிந்திருந்தும்
வீட்டுக் குரிய திறவுகோலின்றி வீடுபுகாரே!


வீட்டுக்குரிய மெய்த்திறவு கோலதைப் பெற்றிட
பாட்டுக் குரியவர் திருப்பாதம்நின்று ஏத்துகவே
பாட்டுக் குரியவர் திருப்பாதம்அது பொற்பாதம்
ஏட்டுக் கல்வியால் அப்பாதமதை ஏத்தமுடியாதே!
 

ஆகையால்,

'சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்
வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் - சாகாத்
தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை
நிலைஅடைதல் வேண்டும் என்கிறார் வள்ளலார்

தனிஅருள் பெற்றிடலாம் நன்குமுயன்றுமேலேறில் மெஞ்ஞானக்
கனிஅதனைத் தினம்உண்டே உளம்களிப்புறலாம் எஞ்ஞான்றும்
துனிஏதும் இல்லாதஒரு பெருவாழ்வு இன்னேஉள்ளதுகண்டிடுக
இனிநான் என்செய்வேனோ என்றெண்ணிக் கலங்காதிருமனனே!

கற்றிடுக சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக்கருணைநெறியே

உற்றிடுக எக்காலமும் சாகாமல்ஓங்கும் அருளொளிவடிவம்
பெற்றேநின் உயர்நிலையைப் பெற்றிடுக உலகில்பிறநிலைப்
பற்றுவிடுத்தே மெய்ஞானத்தனியின்பப் பற்றையே பற்றிடுகவே.

கற்றிடுக சிற்றம்பலக்கல்வி என்பது சாகாக்கல்வி
உற்றிடுக அருளொளிவடிவம் என்பது ஞானதேகம்
பெற்றிடுக நின்உயர்நிலையை என்பது அனகநிலை
பற்றிடுக மெய்ஞானத் தனியின்பமது சுத்தசிவானுபவமே.

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து

All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

நன்றி, வணக்கம், சுபம்!
ஆன்ம நேயம்மிகும்,
அன்பன் துரை சாத்தணன்