தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!
நோயிக்கும் மூப்புக்கும் ஆளாகித் தேகசித்தி பெறாமல் மருத்துவர்களின் சிகிக்சை பலன் அளிக்காமல், இறக்கும் தருவாயில், "தப்புசெய்து விட்டேன் தப்புசெய்துவிட்டேன்" - என்று, புலம்பி அழுத சவாமி சரவணானந்தாவிற்கு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் மூலமாக அருளிய மகாமந்திரத்தை மாற்றி அமைப்பதற்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. ஏதோ ஒரு புறப்பற்றினால் இதுபோன்ற தவறுகளுக்கு சன்மார்க்கிகள் துணைபோகக் கூடாது.
புத்தகத்தின் அட்டையில்,
"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை" - என்ற பெரும் பிழையை அன்பர்கள் கவனிக்கவும்.
சுத்த சன்மார்க்கத்திற்குச் சாதக சகாயமாக அருளால் அருளப்பட்ட மகா மந்திரத்தை மாற்ற நினைப்பவர்கள், முற்றிலுமாக வேறோர் மார்க்கத்தைத் தங்களுக்கு உருவாக்கிக் கொள்வதோ அல்லது வேறு மார்க்கத்திற்கு தாங்கள் மாறிக்கொள்வதோ தவறில்லை! அது ஆண்டவர் செயல்.
அப்படி வேண்டுமானால் வேறோர் வழியில் முத்தேக சித்தி பெற்று, அவ்வழியை இந்த உலகிற்குக் காட்டுங்கள். அந்த வழியானது சுத்த சன்மார்க்கத்தைவிட மிகச் சுலபமாகவும், சிறப்பாகவும் இருந்தால், மற்றவர்கள் வருவார்களோ இல்லையோ, நான் கண்டிப்பாக வருவேன்! அதை விடுத்து விட்டு, புத்தக வியாபாரம் செய்வதற்காகப் பொய்யுரைத்து, புனைந்துரைத்து வீணான குழப்பத்தை உற்பத்தி செய்யவேண்டாம்.
வள்ளலாரைப் போல தேக சித்தி பெறாதவர்கள், பெறமுடியாதவர்கள் - அது யாராக இருந்தாலும் அவர்கள் மாணவ நிலையில் உள்ளவர்களே. அவர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தை மாற்றுவதற்குத் அதிகாரமோ, தகுதியோ கிடையாது. மாறாக, அஃது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பெரும் மறக்கருணைக்கு ஆளாகுகின்ற சாபச்செயலாகும். சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இந்தப் பெரும்பிழையைத் திருத்திக் கொள்ளல் வோண்டும்.
மாயையில் அகப்பட்டு, மனித தரத்தில் இதுபோன்ற எண்ணற்ற பெருந்தவறுகளை நாம் அன்றாடம் செய்வது நம்முடைய இயல்புதான். ஆனால், அருட்பெருஞ்ஜோதி ஆண்டரை உள்ளன்போடு உண்மையிலேயே நம்பி, நமது பிழைகளைத் திருத்திக்கொள்ள முயலும்போது, ஆண்டவருடைய ஆசியை, அவருடைய அறக்கருணையால் நாம் நிச்சயமாகப் பெற்று நன்நிலையை அடைந்திடுவோம். இது கண்கண்ட அனுபவமே! நன்றி!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule
Saravananda books .jpg
தொழுவூர் வேலாயுதனாரின் முதல் அருட்பா பதிப்பிலும் மற்றைய பழம் பதிப்புகளிலும் “ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” என்ற இரு சொற்கள் மட்டுமே உள்ளதை இன்றும் நம்மால் காண முடியும்.
பிற்காலத்தில் தான்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
என்று எழுதும் முறை உண்டானது,
தங்களுக்கு ஐய்யம் இருந்தால் ஊரன் அடிகள், திரு பாண்டுரங்கன் , திரு. வை. நமசிவாயம் போன்ற பொரியோரை கேட்டு தெளியலாம், அல்லது. வெங்கட் அய்யாவின் அருட்பா மறு அச்சுகளை கண்டு உணரலாம்.
எனவே “ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” என்ற இரண்டு சொல்லிலும் எதாவது மாற்றம் இருப்பின் அதை நாம் அனுமதிக்க இயலாது.
மற்றபடி அச்சுப்பிழை என்றால் அடுத்த பதிப்பில் சரிசெய்து கொள்ளலாம்.
தற்போது அனைவரும்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
என்று வழங்குவதால் அதையே அனைவரும் பின்பற்ற அன்போடு வேண்டுகின்றோம்
நன்றி
தயாபெருஞ்ஜோதி, தயாபெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை தயாபெருஞ்ஜோதி
என்று புதியதான ஒரு மந்திரத்தை கொடுத்து குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்.
Please check with Thiru Ramanjuam, Madurai, Iyya.\