www.vallalarspace.com/durai
குருதட்சணை!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்



குருநிலையை அடைந்தவர்க்குக் குருதட்சணை தேவையில்லே
குருநிலையை அடைந்தவர் எதிர்பார்ப்பது காருண்யநற்பணியே
குருவின்காணிக்கை கொடுக்கவிழைவோர் புரிக சீவகாருண்யம்
குருதட்சணை நிர்பந்தமோ பொருள்பறிக்கும் ஓர்திருடர்தந்திரமே!



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

Durai Sathanan
'குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ ?' - என்று வள்ளலார் குறிப்பிடுகின்றாரே!

அன்புடையீர், இன்புற்று வாழ்க! குருதட்சணையானது இந்தப் பொய் உலகினைச் சார்ந்தது அல்ல. அது மிகமிக உயர்ந்தது. அஃது ஆருயிருக்கு ஒப்பானது! அந்த உண்மையை அறிந்த சீடர்களிடத்து, ஓர் சற்குருவானவர் குருதட்சணையை ஒருபோதும் நிர்பந்திக்கவே மாட்டார்கள். அத்தகைய உயர்வுடைய உயிருக்கும் நிகரான தன்குருவின் நற்காணிக்கையை அவரின் உண்மைச் சீடர்கள் எங்ஙனம் கொடுப்பது என்பதை நன்கு அறிந்து, அதைத் தக்கபடி கொடுத்துச் சிறப்பித்துச் சிறப்போடு வாழ்ந்து காட்டுவார்கள். அதுதான் ஒரு உண்மைச் சீடருக்கு அழகாகும்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில், குருதட்சணை என்கின்ற பெயரினால் அப்பாவிகளின் பொருளாதாரத்தைத் திருடும் கடவுள் வியாபாரமானது ஆங்காங்கே மிகவும் மோசமாக நடந்துகொண்டு வருகின்றது. அப்படி அற்பப் பொருளாசை கொண்டு குருதட்சணையை நிர்ணயிக்கின்றவரை, ஒருவகையான திருடர் என்றே எனக்கு உணர்த்தப்படுகிறது. அவர் உலகியலில் திருடர் மட்டுமல்ல, அருளியலில் குருடரும் ஆவார் என்பதுதான் இச்சிறுவனின் கருத்து. இதை நல்ல உள்ளங்களால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், அந்த நல்ல உள்ளங்கள் தங்களின் குருதட்சணையைக் கொடுப்பதைத் தங்களுடைய நன்றிக்கடனாக நினைக்கின்ற உத்தமர்கள் ஆவார்கள்.

இங்கு, மேலே அடியன் குறிப்பிடுவது யாதெனில், பொய்யுலகக் குருமார்களைப் புறந்தள்ளி, சற்குருக்களோடு உத்த சீடர்களின் நல்வுறவுவை மறைமுகமாகச் சிறப்புச் செய்வதே அல்லாமல் வேறொன்றும் இல்லை! நன்றி, வணக்கம், வளமோடு வாழ்க! அருட்பெருஞ்ஜோதி...
Saturday, June 10, 2017 at 15:10 pm by Durai Sathanan