வணக்கம்,
அன்பர்கள் பயன்பெரும் பொருட்டு முனைவர் தவத்திரு ஊரன் அடிகளார் அவர்களின் முன்னுரையும், சத்திய ஞானசபையில் அழகிய இரத்தினங்கள் போல உள்ள திருவருட்பா பாடல்களும், இங்குத் தரப்பட்டுள்ளது அன்பர்கள் படித்துப் பயன்பெருவாராக!
பதிப்பின் சிறப்பு: முனைவர் தவத்திரு ஊரன் அடிகளார்
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே!
திக்குகள் எட்டு "எட்டுத்திசையும்" என்று பட்டினத்தடிகளும், "திக்கெட்டு" என்று அப்பர் பெருமானும் பாடுகின்றனர். "திக்கெட்டும் புகழும்" ஞானசபை "எண்கோண" வடிவில் அமைந்தது.
சபையில் எண்கோண வெளித் திருச்சுற்றிலும்,
உட்திருச்சுற்றிலும்,
சிற்சபை, பொற்சபைகளிலும்,
அகவல் மண்டபத்திலும்,
திருவாயிகளின் மேலும்,
சாளரங்களின்(சன்னல்) மேலும்,
இப்பாடல்கள் அழகுறப் பொறிக்கப் பெற்றுள்ளன.
பாடல்களின் இருபுறங்களிலும் "அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை" என்னும் மகாமந்திரம் முத்திரையாக ஓவிய அழகுடன் பதிக்கப்பெற்றுள்ளன.
ஆ.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த முறை கருத்துக்கினியது.
அவற்றை வாரியார் சுவாமிகள் கற்களில் பதிப்பித்துள்ள முறை கண்ணுக்கினியது.
இதற்காக இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
குறை கூறாது போற்றி வருகின்றார்கள். போற்றிப் பயில்வதும், அச்சிற்பதிப்பித்து வழங்குவதும் அன்பர்களிடை வழக்கமாகி விட்டது. வாரியார் சுவாமிகளே தமது திருப்பணி நிறைவில் வெளியிட்ட நினைவு மலரில் சபைக்கல்வெட்டுப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டார். அத்தொகுப்பின் முதல் அச்சு இதுவே, இரண்டாவதாக, வடலூர் திரு. துறவி கந்தசாமி அவர்கள் வடலூர் சத்தியஞானசபைக் கல்வெட்டுப் பாடல்கள் என்று ஒரு நூலாக வெளியிட்டார். இது இரண்டாவது நூல்.
தற்போது உள்ள இன்னூல் சத்திய ஞானசபையில் உள்ள திருவருட்பா கற்பதிப்புப் பாடல்களோடு, தருமச்சாலையில் உள்ள பாடல்களையும் கொண்டுள்ளது, இது முன்றாவது நூல்.
இன்னுலினை அன்பர்கள் பதிவிறக்கம் செய்தும் (PDF), படித்தும், மற்றவர்களுக்கு அச்சிட்டு வழங்கியும் பயன்பெருவார்களாக!
திருஅருட்பா கற்பதிப்பு பாடல்கள்.JPG